தோழியுடன் கைகோர்த்து நடக்கும்
மழைப்பருவநாட்கள் மறக்கமுடியாதவை
செம்மலர்கள் பூத்துக்குலுங்கும் மரக்கிளையை
ஆசைதீர நான் பிடித்துக்குலுக்க
அவளுக்கென்றே அதுவரை காத்திருந்ததுபோல
மழைத்துளிகள் ஒவ்வொன்றும் மகிழ்ச்சியோடு நீராட்ட
நிலைகுலைந்து “ஒன்ன!” என சிணுங்கிக்கொண்டே
அடுத்து வரப்போகும் மரக்கிளைக்காக
ஆவலுடன் நடைபோடும்
அவளின் அழகை என் சொல்ல!
No comments:
Post a Comment