Thursday, August 14, 2014
வழிப்போக்கன்
கடைசி நிறுத்தமொன்றில்
தாமதமாய் வந்தடைந்தது
அதிகாலை எக்ஸ்பிரஸ் ரயில்
இறங்கையிலும் பெட்டி பைகளோடு
அவசரம் காட்டும் கூட்டத்தை
இடித்து ஏறி கழிப்பறையொன்றைத்
தேடிச் சென்றான் வழிப்போக்கன்
சேகுவேரா
பாதுகை
திமிறிய கூட்டத்தில் இடித்துக்கொண்டு
திருக்கோயில் நுழைந்தான் ராமன்
திரும்பி வந்தபின் தேடினான் தேடினான்
விட்டுச்சென்ற புத்தம்புது பாதுகைகளை
தேடிக்கொண்டே இருந்தான்
கேட்டு வாங்கிச் செல்லும்
குணம் பரதனுக்கு இல்லை.
Subscribe to:
Posts (Atom)