Thursday, August 14, 2014

பாதுகை




திமிறிய கூட்டத்தில் இடித்துக்கொண்டு
திருக்கோயில் நுழைந்தான் ராமன்
திரும்பி வந்தபின் தேடினான் தேடினான்
விட்டுச்சென்ற புத்தம்புது பாதுகைகளை
தேடிக்கொண்டே இருந்தான்
கேட்டு வாங்கிச் செல்லும்
குணம் பரதனுக்கு இல்லை.









No comments:

Post a Comment