Thursday, October 13, 2011
"அப்பா" கொடுத்த உற்சாகத்தில் "கடிதம்"
முதல் சிறுகதை "அப்பா" எழுதியாகிவிட்டது. முதன்முதலா வானத்தில் ஒரு சிறுவன் வண்ண பட்டத்தை பறக்கவிடுவது போல மகிழ்ச்சி. பரந்த பிரபஞ்ச வெளியில் எனது சிறு பட்டமும் பறக்க ஆரம்பித்திருக்கிறது என்ற உற்சாகம். கருத்து.காம் தளத்தில் அங்கை, ஹரி, வால், விகடகவி, கிருஷ், கோவிந்து, சுஜாதா, இந்தியன், தமிழச்சி, ஜீவா என பல சக இணைய பதிவாளர்கள் அளித்த ஆரோக்யமான விமர்சனங்கள் தொடர்ந்து எழுதலாமே என்ற ஆர்வத்தை அளித்தது. வருடம் 2008. பேருந்து பயணத்தில் ஒரு நாள். திடிரென்று ஒரு சிறுகதைக்கான முடிச்சி உதித்த உடனேயே எழுதி முடித்தேன். தலைப்பு "கடிதம்". வாசித்து விட்டுச் சொல்லுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment