Friday, October 17, 2014

அந்த ஒரு...




இங்கே
முக்கியமானதாக
எதையோ சொல்லநினைத்தேன்
மறந்தே விட்டேன்
எதை சொல்லநினைத்தேன்
என்பதை என்னால்
யோசிக்கவே முடியாவண்ணம்
புதுப்புது எண்ண நீர்க்குமிழிகள்
தொடர்ச் சங்கிலியாய்
மேலெழுந்து கொண்டே
மனதை
திக்குமுக்காட வைக்கின்றன
இவை என்று அடங்கும்
எப்போது மறந்துபோனதை
மீட்டெடுக்கப் போகிறேன் என்பதற்கு
இப்போதைக்கு உத்திரவாதமில்லை
காலம் அதன் திசையில்
மனதைக் கடத்திச் செல்கிறது
இனி அதன் எதோ ஒரு புள்ளியில்
மறந்துபோனது எட்டிப்பார்க்கும்
ஆனால் அப்போது
இதே சூழ்நிலை அமையப்பெறுமா
காலம்தான் அதற்கான
இன்னொரு திரைக்கதையையும்
எழுதி வைத்திருக்கும்
நான் இதுவரை வாசித்திராத
புதியதொரு பக்கத்தில்..









No comments:

Post a Comment