Thursday, December 13, 2012

உறவு




சந்திப்புக்களை தொடர்ந்து ஏற்படுத்தி
பரிசுகளைக் கொடுத்து வாங்கி
பரஸ்பரம் தொட்டுக் கொண்டு
மடிசாய்ந்து கதைகள் பலபேசி
சிரிப்பும் அழுகையுமாய் ஒன்றி
நேரம் இப்படியே நீளாதென ஏங்கி
ஒவ்வொரு கணத்தையும் கொண்டாடி
பிரியும் வேளையில் கட்டிப் பிடித்து
முத்தங்களை ஆசைத்தீர வழங்கி
கடைசியாய் எப்போதும் ஒரே கேள்வி
எப்பப்பா அம்மாவோட மறுபடியும்
ஒண்ணா வாழப் போறிங்க?











No comments:

Post a Comment