Wednesday, April 16, 2014

Indian T20 League, 2014 (தொடரின் முதலாட்டம்) கொல்கத்தா Vs மும்பை

கருஞ்சிறுத்தை பாலாஜி இல்லாத கொல்கத்தா! வழக்கம் போலவே இந்த ஆண்டும் இவர்களை ஆதரிக்க வேண்டுமா என்ற தயக்கம் ஒருபுறம். சுனில் நரின், பியூஷ் சாவ்லா சுழல் கூட்டணியே இறுதிவரை இவர்களை கொண்டுவருமே என்ற அசட்டு நம்பிக்கை இன்னொருபுறம்..

கிழ சிங்கம் காளிங்கன், முரடன் கம்பீர், யூஸ்லஸ் பதான் மற்றும் ஊத்தப்பன் இவர்கள் வழக்கம் போல சொதப்பப் போகிறார்கள் என்பதில் மட்டும் தீர்க்கமாக இருந்த எனக்கு காளிங்கர் மட்டும் "இன்னும் நான் சோடை போகவில்லை" என நடுவிரலை காட்டினார். தொடரின் முதல் நான்கு, ஆறு இரண்டையும் துவங்கிய வீரர் மங்கள் பாண்டேவோடு காளிங்கர் ஆடிய அதிரடி மற்றும் பொறுப்பான ஆட்டம் நெம்புகோல் போல பயன்பட்டு ரன்கள் என்ற கடும்பாறையை கொஞ்சம் கொஞ்சமாக மேலே உயர்த்திச் சென்றது. எதிர்பார்த்தபடியே ஊத்தப்பனும், பதானும் வந்து போனார்கள். யாதவரின் புண்ணியத்தில் இலக்கு 163. மும்பைக்கு சவால் விடும் இலக்கே.

மும்பை பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் சாலச் சிறந்தது. அதில் மலிங்கா, ஜாகீர் பந்துவீச்சை ஒரளவிற்கு சமாளித்தாகிவிட்டது. மற்றபடி மும்பை அணியில் சொல்லிகொள்வதுபொல பந்துவீச்சில் யாருமில்லை. ஓஜா, ஹர்பஜர் இருவருமே சோபிக்கத் தவறி விட்டனர் என்ற அனுதாபமே கொஞ்சம் கூட எனக்கு இல்லை. சென்னையிலிருந்து மும்பைக்கு ஜாகையை மாற்றிக்கொண்டிருக்கும் ஹசி ஒருவரே போதும், தனியாளாக நின்றே வெற்றியின் அருகே அழைத்துச் சென்றுவிடுவார். எப்படி சுனில் நரினை சமாளிக்கப் போகிறார் என்ற ஆர்வம் விஸ்வரூபம் எடுக்கும் முன்பேயே நமத்துப் போன புஸ்வானமாகிப் போனார் ஹசி. அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் ராயுடு மற்றும் ரோஹித். நிலைத்து நின்று ஆடினாலும் ரன்களை துரத்த முடியாமல் போனது. சுழல் பந்துவீச்சில் நரினொடு சாவ்லா சேர்ந்துகொண்டதால் வெற்றி இலக்கு கானல் நீராக மாறத் தொடங்கியது. மார்க்கலின் பந்துவீச்சும் நேர்த்தியாக அமைந்து மிகப்பெரிய அரணாக எழுந்தது. மும்பை அணி எவ்வளவு முக்கியும் பலனில்லாமல் போனது. போலார்டு போனத் தொடரிலேயே பல்புடுங்கின பாம்பாகவே பலமுறை வலம் வந்தார். இந்த முறையும் அதையே வழி மொழிந்திருக்கிறார்.

41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி என்பது மும்பை அணி எந்த அளவிற்கு பலகீனம் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. ஆனாலும் மலிங்கா, ரோஹித், ஹசி போன்றவர்கள் இனிவரும் ஆட்டங்களில் மும்பையை சீர்தூக்க முடியும். கொல்கத்தா அரையிறுதிக்கு தகுதிபெறும் என்றெ நினைக்கிறென். பார்க்கலாம்.

No comments:

Post a Comment