Thursday, March 7, 2013

மழை




நதிகள் கரை புரண்டோடும் மழைக்காலம்
மதகுகள் வாய்திறக்க கண்மாய் நிறையும்
மரஞ்செடிகள் தரைதட்டி பாதை மறிக்கும்
நஞ்சை வயல்களில் நெற்கதிர் மூழ்கும்
குளம் குட்டையில் சாரைகள் நெளியும்
கொஞ்சமாய் வெக்காளித்து வானம் இருளும்
சாலை முகங்கள் குடைக்குள் ஒளியும்
வேக வாகனம் நீரள்ளித் தெளிக்கும்
பள்ளி மூடப்பட்டு தேர்வு தள்ளிப்போகும்
காகிதக் கப்பல்விட்டு சிறார் குதூகலிக்கும்
ஆடுமாடுகள் வாசலில் அடைந்து படுக்கும்
கூரைவழி வடிவதை பாத்திரம் சேகரிக்கும்
மின்சாரம் ஒரேயடியாய் துண்டிக்கப் படும்
கடைகள் மூடி நடமாட்டம் குறையும்
தவளைகள் இடைவெளி விட்டு கத்தும்
ஊரே சீக்கிரம் உறங்கி விடும்
காத்து மழை இடி மின்னல் தொடரும்
அரிக்கேன் அணையாமல் விழித்திருக்கும்.


No comments:

Post a Comment